Thread: Upanayanam
View Single Post
Old 06-07-2012, 03:08 AM   #34
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
............ தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அறுபதுகளை எட்டும் தாய்க்குலம் இப்படிச் சொன்னாலும், இருபதுகளில் உள்ள தாய்க்குலம் ஒப்புக்கொள்ள வேண்டுமே!!

ஏன் இப்படிச் சொல்லுகிறேன் தெரியுமா?


சமீபத்தில் அமெரிக்க வாழ் மகன், மருமகள் தங்கள் மகளின் ஆயுஷ் ஹோமத்தை இந்தியாவில் நடத்தத் தீர்மானித்தார்கள்.

சுற்றமும், நட்பும் சிறிய வட்டத்தில் வந்தால், எங்கள் முதல் மாடிப் பகுதி (1500 சதுர அடி) போதும்! இதைச் சொன்னவுடன்,

வாழைப் பூவாக மாறியது இளைய தாய்க்குலத்தின் முகம்! விளைவு:



அருகிலுள்ள கல்யாண மண்டபம் ஏற்பாடு!


சாஸ்திரிகள் நால்வருக்கு எட்டாயிரம் தக்ஷிணை.


எல்லோருக்கும் தாம்பூலத்துடன் முறுக்கு, லட்டு.


சுற்றத்தாருக்கு, புடவை-வேஷ்டிகள்.


சம்பந்தி மரியாதை ஸ்பெஷல் புடவை-வேஷ்டி.


மற்ற மகளிருக்கெல்லாம் ரவிக்கைத் துணி.



நல்ல வேளை! எல்லோரிடமும் கணினி இருப்பதால், பத்திரிக்கை மட்டும் அடிக்கவில்லை! ஆகச் செலவு
ஒண்ணரை

லகரம்!
'டாலரில் சம்பாதிச்சா ஏன் பண்ணக் கூடாது?' என்று விமர்சனம் வேறு!! என்ன செய்வது?


பின் குறிப்பு:
பெங்களூர் திருமணம் ஒன்றில், வரவேற்புப் பூ அலங்காரத்திற்கு மட்டும், ஐந்து லகரம் செலவு செய்தார்களாம்!!

MannoFr is offline


 

All times are GMT +1. The time now is 10:32 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity