Thread
:
தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக!
View Single Post
07-14-2012, 09:23 PM
#
3
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
ஆரியம் போல் வழக்கொழிந்து அழிந்து சிதையா உன்...... என்று சம்ஸ்கிருதத்தைக் குறைகூறியிருக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் என் மனைவி அழகானவள் என்று சொல்ல வந்து விட்டு, அடுத்தவீட்டு செத்துப்போன மூளி போல இல்லாமல் என் மனைவி இந்திர லோக சுந்தரி என்று சொன்னது போல இருக்கிறது. மகத்தான தமிழ் மொழியைப் படிக்கும்போது ஆனந்தம் கொப்புளிக்கிறது. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிவிட்டு மற்றவர்களைத் திட்டிக்கொண்டே காலம் தள்ளுபவர்களைப் புரிந்துகொள்ளுவது கடினமாக இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் எழுதிய நாடகம் தமிழ் ஒரிஜினலும் அல்ல. ஆங்கி லநாடகத்தின் தழுவல். இல்தி மாற்று மொழிகளைத் திட்டுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
12:22 PM
.