Thread
:
Kalaignar TV?
View Single Post
11-27-2007, 12:21 AM
#
13
Paul Bunyan
Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் சொல்லியிருக்கிறார். வரவேற்போம். ஆனால் அதை விட மோசமான குடிக்கும் (மதுவருந்தும்) காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறுகின்றன. இளைஞர்கள் விரும்பி பார்க்கும் திரைப்படங்களில் மட்டுமல்ல, குடும்பத்தோடு பார்க்கக்குடிய தொலைக்காட்சிகளிலும் சர்வ சாதரணமாக இடம் பெறுகின்றன. முன்பெல்லாம் குடிப்பவன் என்றால், வில்லனையும் கொடுரமானவனையும் காண்பிப்பார்கள். ஆனால் இப்போதோ, குடிப்பழக்கம் இல்லாத கல்லூரி மாணவனையே காண்பிப்பதில்லை. போலீஸ்கார்கள் காவல் நிலையத்திலேயே குடிப்பதாக காட்டுகிறார்கள். காசு என்பதை எப்படியாவது சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் தான் இவர்கள் அலைகிறார்களா?.
'உங்களை யார் மேடம் பார்க்கச்சொன்னார்கள்?' என்று இவர்கள் கேட்கலாம். நான் ஒருத்தி மட்டும் தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டால் போதுமா?. மற்றவர்கள் கெட்டால் பரவாயில்லையா?. சமீபத்தில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் (கலக்கப்போவது யாரு 3) ஒருவர் நகைச்சுவை பண்ணுகிறார். எப்படி தெரியுமா?. அப்பன் வைத்திருந்த மதுவை குழந்தை குடித்து விட்டு, மயக்கத்தில் ஊறுகாய் கேட்கிறதாம். மிமிக்ரி பண்ணுகிறார். அதை நடுவர் எஸ்.வி.சேகரும், உமா ரியாஸும் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆண்டவா....
நகைச்சுவைக் காட்சிகளில் குவாட்டர், கட்டிங் என்ற வார்த்தைகள் இல்லாத ஜோகுகள் ரொம்பவே அரிதாகி வருகிறது. இதுக்கெலாம் அரசாங்கம் தான் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் என்பதில்லை. 'இவற்றை மக்களுக்கு கொடுத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்றால் அந்த காசு எனக்கு தேவையில்லை' என்று இவர்கள் முடிவெடுக்க வேண்டும். இவர்கள் யாரும் வேற்றுக்கிரக வாசிகள் அல்ல. சமுதாயத்தில் இவர்களும் ஒரு அங்கம்தான் என்பதை உணர வேண்டும்.
'எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்ற தோற்றமுடைய ஒருவர் வருகிறார். அவர் அங்குள்ள பெண் காம்பியர் மகேஸ்வரியிடம் 'வழிவதை' ஒரு தொடர் நகைச்சுவையாக வைத்திருக்கிறார். போதும் நிறுத்துங்க தம்பி......
Quote
Paul Bunyan
View Public Profile
Find More Posts by Paul Bunyan
All times are GMT +1. The time now is
05:05 PM
.