View Single Post
Old 04-13-2010, 09:23 PM   #15
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
ஒரேயடியாக தனித்தமிழிலோ செந்தமிழிலோ பேச வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடு அல்ல .வலிந்து கொண்டு வார்த்தைகளை தேடிப் பேச வேண்டுமென்பதில்லை .ஆனால் தெரிந்த வார்த்தைகளை முடிந்த அளவு பயன்படுத்தினாலே போதும் என்பது என் கருத்து .
அதே தான். தனித்தமிழ் என்பது கேட்பவரிடம் பிரமிப்பை மட்டும் நிகழ்த்துவதால் பலர் முயல்வதே இல்லை. இயல்பாக படாடோபம் இல்லாமல் இருக்கும் பேச்சு அடுத்தவர்களையும் அவ்வாறு பேச ஆசைப்பட வைக்கும். உங்கள் உங்கள் பேச்சிலிருந்தே ஒரு எடுத்துக்காட்டு:

நான்: ரயில்வே ஸ்டேஷன் பக்கதுல தான் இருக்கு
ஜோ: ரயில் நிலயம் பக்கத்துல தான் இருக்கு
தனித்தமிழார்வலர்: தொடர்வண்டி நிலையம் பக்கத்துல இருக்கு

ரயில் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறிக்கும் சொல்லாக தமிழுக்குள் வந்துவிட்டது. தொடர்வண்டி என்று சொல்வது சிறப்பு தான். ஆனால் அனேகரை தயக்கம் கொள்ளச்செய்யும் ஒரு பயன்பாடு* அது. மாறாக ஸ்டேஷன் என்று சொல்லத் தேவையில்லை. மிக இயல்பாக 'நிலையம்' என்று சொல்லலாம். இது போன்ற சின்ன்சின்ன விஷயங்கள் தான் பிறரையும் தேவையற்றப் பிறமொழிப் பயன்பாட்டைக் களைந்து பேசத் தூண்டுபவை.

நான் பல இடங்களில் "நன்றி", "இடதுபக்கம்/வலது பக்கம்" என்றெல்லாம் சொல்வதை மிகுந்த பிரக்ஞையுடனே செய்வது உண்டு. குறிப்பாக குழந்தைகளிடம் தமிழிலேயே பேசுவது வழக்கம்.

PS: நான் அம்மாவை அம்மா என்றும், அப்பாவை Daddy என்றும் அழைப்பது தொட்டில் பழக்கம். இதன் உளவியல் பெண்ணிய ஆய்வுக்குறியது
Raj_Copi_Jin is offline


 

All times are GMT +1. The time now is 02:00 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity