View Single Post
Old 03-09-2009, 04:17 AM   #35
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
ஒரு , ஓர் பயன்பாடு
------------
இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் ( ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிப்பிடப் பயன்படுவது)

ஓர் எனும் சொல் உயிரெழுத்தில் துவங்கும் ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஓர் அரசன்
ஓர் ஈட்டி
ஓர் உலகம்
ஓர் ஓடம்


ஒரு எனும் சொல் உயிர்மெய்யில் துவங்கும் ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கடிதம்
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஒரு பூ


தற்காலத் தமிழ்க் கவிகள் பாடலின் சந்தத்திற்காக இரண்டையும் (ஓர், ஒரு) ஒன்றாகப் பாவித்தெழுதி பயன்பாட்டுக் குழப்பத்தினை உருவாக்கிவிட்டார்கள்.

// ஆங்கிலத்தைத் துணைக்கழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஓர் - an
ஒரு - a

//
"அன்புள்ள மான்விழியே!
ஆசையில் ஓர் கடிதம்!"

என்ற திரைப்பாடல் நினைவுக்கு வருகிறதோ?

"தானே முளைக்குதாம்
தரணியில் ஓர் பூண்டு" - (ஒரு நாட்டுப் பாடல்)

ஒரு பூண்டு என்றால் இசைமுறிவு ஏற்படும்.


கவிதையில் மட்டும் இப்படி எழுதலாம். விதிவிலக்கு. அப்போது அது தவறாகாது.

மற்றும் சொல்லாக்கத்திலும் இதே விதிவிலக்கு கையாளப்படுகிறது:

எ-டு: ஓர்+ படியாள் = ஓர்படியாள் > ஓப்படியாள் (பேச்சுவழக்கு).

ஒருபடியாள் என்றன்றோ வரவேண்டும். அப்படி வரவில்லை.

It is a question of "General Rule" and "Exceptions".

Also consider " poetical licence"!!
radikal is offline


 

All times are GMT +1. The time now is 12:55 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity