View Single Post
Old 01-29-2011, 06:36 AM   #38
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
இன்னொரு முறை மீள்வாசிப்பு தண்ணீர் தேசத்தை. ஹமித்திற்கு நன்றி. நல்லதொரு வாசிப்பு அனுபவம். பல இடங்களில் நாம் பார்த்திருந்த காட்சிகளை இவர் எழுத்து வடிவில் பார்க்கும் போது பரவசம். உதாரணமாக கடல் பயணத்தின் ஆரம்ப இடங்களில் இப்படி..

ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவது பார்.


இந்த வரிகளை கடக்கும் போது, அந்தக் காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. நாமும் ஒரு பார்வையாளனாக விசைப்படகில் அவர்களோடு பயணிக்கத் தொடங்குகிறோம்.

தமிழ்(கதையில் வரும் பெண்ணின் பெயர்) கடல் ஒவ்வாமையால் மயக்கம்,வாந்தி வரும் நிலை..

எனக்கிது தேவைதானா?

அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.

ஒரு இடத்தில் கடல் அலை விசைப்படகில் புகுந்து தமிழை நனைத்துவிடுகிறது.

தண்ணீர் சொட்டச் சொட்ட தானே
தலைதாங்கித் தமிழ்ரோஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.


இன்னொரு இடத்தில் தமிழ் வாடியிருக்கும் முகத்திற்கு இப்படி ஒரு உவமை.

வாடிய கீரையைத்
தண்ணீர் தெளித்து வைப்பது
மாதிரி
வாடிய அவள் முகத்தில்
வேர்வை தெளித்தது வெயில்.


தண்ணீர் தேசம் நாவல் முழுவதும் ஏதோ ஒரு முக்கியமான க்ரிக்கட் இறுதிபோட்டியின் Highlights-ஐ தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பது போல இருக்கிறது. வரிக்கு வரி கவிஞர் நான்கு, ஆறு என ரன்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்.
Beerinkol is offline


 

All times are GMT +1. The time now is 02:44 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity