Thread
:
1000 songs to hear before you die.
View Single Post
10-07-2010, 09:43 AM
#
22
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
வாழையடி வாழையாய் தொடர்ந்து வரும் நமது கலாச்சாரத்தின் ஒரு பிரதிநிதியாய் வரும் பாடல் "வாராய் என் தோழி வாராயோ"
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
தனியாக காண வருவார்
இவள் தளிர் போலே தாவி அணைவாள்
கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
07:01 PM
.