View Single Post
Old 05-14-2010, 02:21 AM   #39
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
பாடல்: அந்திமழை பொழிகிறது
திரைப்படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
ஆஆஆ...ஆஆ ஆ...ஆஆ ஆஆ
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
ஆஆஆ...ஆஆ ஆ...ஆஆ ஆஆ
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
Lt_Apple is offline


 

All times are GMT +1. The time now is 09:00 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity