View Single Post
Old 06-29-2012, 03:04 AM   #2
CiccoineFed

Join Date
Oct 2005
Posts
536
Senior Member
Default
இந்து மத கோட்பாடுகள் அனைத்துமே நம் பெரியோர்களால் அலசி ஆராயப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டவை.

சைவ (வெஜ்) முறையில் அனைத்து கோவில்களும் பின்பற்றப்பட்டுவரும் அதே வேளையில் கிடா வெட்டுவது, கோழி வெட்டுவது போன்ற (நான் வெஜ்) முறையும் பல கோவில்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இது நம் மதத்தில் உள்ள சுதந்திரத்தைக் காட்டுகிறது.

நெற்றியில் வீபுதி அல்லது திருமண் இட்டுக்கொள்வது ஆங்கிலத்தில் சொல்வார்களே " பேஸ் ரீடிங்க் " அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பின்பற்றப்பட்டுவரும் நடவடிக்கையாக இருக்கும் என்று ஆங்கில வல்லுனர்களே கூறுகின்றனர்.
மேலும் நெற்றி வியர்வையை உறிஞ்சிவிடும் என்பதும் உண்மையாக இருக்கலாம்.

முறண்பாடுகள் அனைத்து மதத்திலும் உண்டு. 8ம் நூற்றாண்டில் மார்டின் லூதர்கிங்க் கிறிஸ்தவ மதத்தில் புரட்சியைத் தோற்றுவித்தார். கிறிஸ்தவ மதம் இரண்டாகி புராஸ்டட்டண்டுகள் தோன்றினர். அதன்பின் 7த் டே, பெந்தேகோஸ்த் என்று கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளானது. இன்று வரை கிறிஸ்தவ மதத்திலிருந்து பிரிந்த அனைத்து பிரிவுகளும் உடைந்த கண்ணாடிபோல் தனித் தனியாகவே இயங்கி வருகின்றது.

ஆனால் சைவமும் வைணவமும் அந்தக்காலத்தில் பிரிந்தாலும் என்றோ இணைந்துவிட்டது. இன்று சைவத்தையோ, வைணவத்தயோ இந்து மதத்திலிருந்து எவராலும் பிரிக்கமுடியாது. அது இந்து மததிற்கே உரிய தனி சிறப்பு.

ஷியா , சன்னி,லெப்பை,பட்டாணி,ராவுத்தர் என்று இஸ்லாத்தில் எத்தனை பிரிவு. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வேண்டுமானால் இருக்கலாம் . ஆனால் அவர்களுக்குள் பெண் கொடுத்து வாங்குவது கிடையாது. ஷியாவைக்கண்டால் சன்னிக்குப் பிடிக்காது.சன்னி முஸ்லிமைக்கண்டால் ஷியாவிற்க்குப் பிடிக்காது. டாம் & ஜெர்ரி போல் இன்றும் இருக்கின்றனர்.

மூடநம்பிக்கை எந்த மதத்தில்தான் இல்லை ? உலகம் அழியப்போகின்றது என்றும் அதற்க்குள் கர்த்தரிடம் அடைக்கலமாகவேண்டும் என்று சுமார் 500க்கும் மேற்பட்ட அப்பாவி கிறிஸ்தவர்கள் மலைமீதிருந்து குதித்து தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளவில்லையா?

போலி மடாதிபதிகளும் போலிச்சன்யாசிகளும் எங்குதான் இல்லை? .திருச்சி பாதிரியார் கற்பழித்துவிட்டார் என்று கன்னியாஸ்திரி திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து இன்றும் வழக்கு விசாரணையில் உள்ளது.

மததின்மேல் நம்பிக்கை என்பது அதற்க்கும் மேலானது.

இந்து மதத்தின் மேல் ஒரே ஒரு மனக்குறை... அது தான் ஜாதி...அது மட்டும் ஒழிக்கப்பட்டால் நாத்திகனுக்கு இங்கு வேலை இல்லை. அதை வைத்துத்தான் இங்கு அரசியல்வாதி குளிர் காய்ந்து வருகின்றான்...
CiccoineFed is offline


 

All times are GMT +1. The time now is 05:32 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity