View Single Post
Old 10-22-2011, 08:27 PM   #3
hygtfrdes

Join Date
Oct 2005
Posts
434
Senior Member
Default
#11. “நாராயணா!”


“நாராயணா!” எனும் நாமத்தை
நாவாறச் சொன்னாலே போதும் ;
நன்மைகள் நம்மைச் சூழும், பல
வண்மைகள் நம்மை வந்தடையும் .

அந்தண குலத்தில் பிறந்து, குலத்தின்
அறங்களைக் கைவிட்டு வாழ்ந்தும்,
நாராயண நாம வைபவத்தாலேயே
நரகத்தைத் தவிர்த்தவன் கதை இது!

அந்தணன் அஜாமிளன் ஒரு நாள்
தந்தை சொற்படிக் கானகம் சென்றான்.
காமத்தின் வசப்பட்டவனாய், அங்கு ஒரு
காரிகையைக் கண்டு விரும்பினான்.

இழி குலத்தில் பிறந்தவள் அவள்;
இன்பம் அளிப்பதில் கைதேர்ந்தவள்;
குலம், ஆசாரம், கல்வி, தவம் கெடக்
கூடி வாழ்ந்தான், குடும்பம் பெருகிற்று.

கடைக் குட்டியின் பெயர் நாராயணன்;
கடைத்தேறவும் அதுவே உதவியது!
மரண காலத்தில் தன் முன் தோன்றிய
முரட்டுக் கிங்கரரைக் கண்டு அஞ்சினான்.

நடுங்கிய வண்ணம் நாவாற அழைத்தான்,
“நாராயணா!” என்று தன் செல்ல மகனை!
விஷ்ணு தூதர்கள் வந்தனர் விரைவிலே
யே;
விவாதம் துவங்கிற்று குழுக்களிடையே!

பாவங்களைப் பட்டியல் இட்டு
படித்துக் காட்டினர் யம கிங்கரர்;
பகவான் நாமத்தைச் சொன்னதுமே,
பாவம் தொலைந்தது என்றனர் தூதர்.

இறுதியில் வென்றனர் விஷ்ணு தூதர்கள்.
சடுதியில் நற்கதி அடைந்தான் அஜாமிளன்.
விண்ணப்பித்த கிங்கரரிடம் கூறினான் யமன்,
“விஷ்ணு பக்தரை இனி அணுக வேண்டாம்”.

நெருப்பு, சருகுகளை எரிப்பது போலும்,
மருந்து, நோய்களை அழிப்பது போலும்,
நாராயணனின் நாமம், நவின்றவர்களின்
நூறாயிரம் பாவங்களை அழித்துவிடும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
hygtfrdes is offline


 

All times are GMT +1. The time now is 10:33 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity