Thread
:
தேவாரம்
View Single Post
03-25-2008, 10:38 PM
#
5
Knqzjbmf
Join Date
Oct 2005
Posts
316
Senior Member
திருஞான சம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல்
ஆலிம் மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி நினைவார் வினையிலரே.
திருச்சிற்றம்பலம்
பொருளுரை: பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும், மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற விரிந்த சாரலும், நீர்த்துளிகள் நிறைந்த மேகங்கள் தவழ்கின்ற (உயர்ந்த) காடுகளும் உடைய திருவண்ணாமலையில் உறைகின்ற அண்ணலாரின் காலனுடைய வலிமையை நீக்கிய சேவடிகளை யார் நினைக்கின்றார்களோ அவர்கள் வினை நீங்கப்பெற்றவர்கள்.
Quote
Knqzjbmf
View Public Profile
Find More Posts by Knqzjbmf
All times are GMT +1. The time now is
08:03 PM
.