View Single Post
Old 03-26-2008, 01:17 PM   #6
TeveVikep

Join Date
Oct 2005
Posts
483
Senior Member
Default
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

உதிரும் மயிர் இடுவெண்டலை கலனா உலகெல்லாம்
எதிரும் பலி உணலாகவும் எருது ஏறுவது அல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேற் கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலையதுவே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: முடி உதிர்ந்த வெண் தலையை இடுகின்ற ஓடாகக் கொண்டு உலகெங்கும் எடுக்கும் பிச்சையை உணவாகவும், எருதினை வாகனமாகவும் உடையவராக இருப்பது மட்டுமல்லாமல் முதிர்ந்த சடைமேல் இளமையான வெண்பிறையை அணிந்து திருவடிகளில் அதிர்ந்து ஒலிக்கின்ற கழல்களை உடைய அடிகளாருடைய இடமே அந்தத் திருவண்ணாமலை.
TeveVikep is offline


 

All times are GMT +1. The time now is 03:20 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity