View Single Post
Old 03-28-2008, 11:04 AM   #8
Twendypreency

Join Date
Oct 2005
Posts
471
Senior Member
Default
பேயோடாடும் பிரான் பெண்ணோடு அமர்வது எங்கே?

திரு ஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை உதையுண்டு அவை உருள
எரியாடிய இறைவர்க்கு இடம் இன வண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலையதுவே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: கரிந்த கால்கள் உடையனவும், குடரைக் கவர்ந்து தின்னுவனவும் ஆகிய பேர்கள் ஆடிய காட்டில், சிரித்தபடி இருக்கின்ற வெண்மையான தலைகள் நரிகளால் உதைபட்டு உருள, (அங்கு) எரியேந்தி ஆடுகின்ற இறைவருக்கு, வரியுடைய கண்களையுடைய அம்மையினோடு இருக்கும் இடம் யாதெனில், இன வண்டுகள் ஒலிக்கின்ற திருவண்ணாமலையே ஆகும்.
Twendypreency is offline


 

All times are GMT +1. The time now is 07:57 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity