View Single Post
Old 08-15-2009, 04:26 AM   #23
Intockatt

Join Date
Oct 2005
Posts
653
Senior Member
Default
இன்றைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்
உலக்குக்கு மீட்டு கொண்டு வந்தவர் உ வே சாமிநாத அய்யர்
அவர்கள் . அந்த தமிழ் தாத்தா தமிழுக்கும் சைவத்துக்கும்
செய்யாத தொண்டா ? ஒருமுறை பகவான் ரமணரிடம் சென்று
தரிசனம் செய்தார் . அப்பொழுது , " நான் தமிழ் தமிழ் என்று
அலைந்து திரிந்து விட்டேன் . நான் எங்ஙனம் கடைத்தேருவது
என அறிகிலேன் ", என்றதற்கு ரமணர் ," தமிழ்த்தொண்டும் சிவத் தொண்டே . கவலையே வேண்டாம் ",என்று கூறினார் .ரமணரது போற்றத்தக்க பக்தர்களுள் முருகனார் ஒருவர் .
அவர் தமிழில் இக்காலத்தே 30,000 பாடல்களுக்கு மேலே .
கொடுத்துள்ளார் . அவர் பிராம்மண குலத்தில் உதித்தவரே .
இன்றும் தலைசிறந்த தமிழ் கலைக் களஞ்சியம் ஏழு
நூல் தொகுப்புகளாக(TAMIL LEXICON) சென்னை பல்கலை கழகத்தில் உள்ளதே அதை தொகுத்தவர்களில் முருகனாரும் ஒருவர் . அதில் அதிகமான் பிராமணர்கள் பங்குகொண்டுள்ளனர்
ரமணர் அவரது அனைத்து உபதேசங்களையும் தூய தமிழில்
கொடுத்துள்ளார் . இன்று இந்திய பல மொழியனரும் மற்றும் பல நாட்டினரும் அந்த தமிழ் பாக்களை அவர்களது மொழியில் transliteration செய்து பாராயணம் செய்துவருகிறார்கள் .
ஆனால் தமிழ் நாட்டில் அறிந்தவர்கள் கொஞ்சமே .

அத்வைதம் என்பது ஒரு குழுவினரது அல்ல . அது ஒரு நிலைப்பாடு .அதை கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை .

Intockatt is offline


 

All times are GMT +1. The time now is 10:03 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity