Thread
:
thaRkkaala thamizh ilakkiyam
View Single Post
02-27-2008, 07:15 PM
#
20
Peptobismol
Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
சுஜாதாவில் 'கடவுள்' கட்டுரைத் தொகுப்பு.
'கடவுள்' என்ற கான்செப்டை (இதற்கு தமிழ்சொல் என்ன ?) வரலாறு,மதம், இலக்கியம், இயற்பியல் என்ற பல கோணங்களில் இருந்து அலசி எழுதப்பட்ட கட்டுரைகள்.
80-90 களில் (சுஜாதாவின் பொற்காலம் ?) பல பத்திரிக்கைகளில் எழுதியவற்றின் தொகுப்பு. புரிவதற்கு கடினமானவற்றைக் கூட அணுகமுடியுமாறு எழுதப்பட்ட கட்டுர்ரைகள். வெவ்வேறு தொடர்களின் தொகுப்பு என்பது நன்றாகத் தெரிவது ஒரு குறை (திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட தகவல்கள், பாசுரங்கள்).
அப்பித்திரிக்கையின் சராசரி வாசகன் யார் என்பதை வைத்துக்கொண்டு எழுதுப்பட்டிருக்கிறது. சிலவற்றில் வெறும் தகவற்குவியல், சிலவற்றில் வியப்பான கேள்விகள், சற்று ஆழமான ஆராய்ச்சி, வாசகன் மீது எப்போதும் ஒரு கண்:
இதற்கு மேல் எழுதினால் மூடிவைத்துவிட்டு பெப்ஸி உங்கள் சாய்ஸ் பார்க்க சென்றுவிடுவீர்கள்
அதிகம் தலைமுடி உள்ளவர்கள் இக்கேள்வி பற்றி மேலும் யோசிக்கலாம்
கடினமானவற்றை விளக்கும்போதுகூட குன்றாத மொழிச்சரளத்துக்காகவே இதைப் படிக்கலாம்.
Quote
Peptobismol
View Public Profile
Find More Posts by Peptobismol
All times are GMT +1. The time now is
07:05 AM
.