Thread
:
SAKALAKALAVALLI MALAI- by KUMARA GURUBARAR
View Single Post
10-07-2007, 03:46 AM
#
4
brraverishhh
Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
சகலகலாவல்லி மாலை பாடல் 3
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து - என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு
உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? - உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோ?
உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் - உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள்
கவிமழை சிந்தக் கண்டு - கவிதை மழை சிந்த அதனைக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! - மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே!
சகலகலாவல்லியே! - கலைவாணியே!
Quote
brraverishhh
View Public Profile
Find More Posts by brraverishhh
All times are GMT +1. The time now is
11:05 AM
.