Thread
:
SAKALAKALAVALLI MALAI- by KUMARA GURUBARAR
View Single Post
10-15-2007, 10:11 PM
#
7
Slonopotam845
Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
சகலகலாவல்லி மாலை பாடல் 6
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே
பண்ணும் - இசையும்
பரதமும் - ஆடலும்
கல்வியும் - எல்லாவிதமான கலைகளும் கல்விகளும்
தீஞ்சொல் பனுவலும் - இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் (பன்னிப் பன்னிப்) பாடும் படியான பாடல்களும்
யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் - நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்!
எழுதா மறையும் - நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும்
அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே - உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே!
Quote
Slonopotam845
View Public Profile
Find More Posts by Slonopotam845
All times are GMT +1. The time now is
04:22 PM
.