View Single Post
Old 10-15-2007, 10:11 PM   #7
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
சகலகலாவல்லி மாலை பாடல் 6

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே

பண்ணும் - இசையும்

பரதமும் - ஆடலும்

கல்வியும் - எல்லாவிதமான கலைகளும் கல்விகளும்

தீஞ்சொல் பனுவலும் - இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் (பன்னிப் பன்னிப்) பாடும் படியான பாடல்களும்

யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் - நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்!

எழுதா மறையும் - நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும்

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே - உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே!
Slonopotam845 is offline


 

All times are GMT +1. The time now is 04:22 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity