Thread
:
Tamil songs in remix form.....
View Single Post
02-07-2007, 08:11 PM
#
19
Lt_Apple
Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
சமீப காலமாக தமிழ்த்திரையுலகை பீடித்திருக்கும் புதிய எய்ட்ஸ் நோய் இந்த 'ரீமிக்ஸ்' எனப்படும் (பழைய அருமையான பாடல்களை) கொலை செய்யும் முயற்சி.
ஏன் புதிய இசையமைப்பாளர்களுகெல்லாம் என்ன ஆச்சு?. அவர்கள்தான் "முந்தி இருந்தவர்கள் இசையில் எதையும் சாதிக்கவேயில்லை. நாங்கள்தான் வானத்திலிருந்து 'தொபுக்கடீர்னு' குதிச்ச இசையமைப்பாளர்கள். புதிது புதிதாக இசையில் புதுமைகளை செய்து கொண்டேயிருக்கிறோம்" அப்படீன்னு தொலைக்காட்சிகளில் வாய் கிழிய பேட்டி கொடுக்கிறார்களே.
அப்புறம் ஏன் பழைய பாடல்களின் காலில் போய் விழுகிறார்கள்?. ஏன் இவர்களின் கற்பனா சக்தி வற்றி வரண்டு போய் விட்டதா?. அப்படியானால் இடத்தை காலிசெய்து கொண்டு போக வேண்டியதுதானே?. ஏன் இந்த பழைய பாடல்களை சிதைக்கும் முயற்சி?.
சமீப காலமாக முந்தைய மெட்டுக்களை மட்டுமே காப்பியடித்து, அதில் புதிய வார்ததைகளை புகுத்தி தந்தார்கள். (அதாவது முதலில் வறணடது இசையமைப்பாளர்களுக்கு). இப்போது பாடலாசிரியர்களுக்கும் கறபனை வறண்டு விட்டது போலும்.
பழைய பாடல்க்ளை அப்படியே வரிக்கு வரி தந்து விடுகிறார்கள். அதுக்கு எதுக்கு ஒரு பாடலாசிரியர், எதுக்கு ஒரு இசையமைப்பாளர்?. பேசாமல் பழைய பாடலையே ஓட விட்டு அதுக்கு ஆடி விட்டுப் போய்விடலாமே.
நாம் பொக்கிஷங்களாக போற்றிப் பாதுகாக்கும் அற்புதமான பழைய பாடல்களை இந்த கற்பனா சக்தியற்ற புல்லுருவிகள் சிதைக்க அனுமதிக்க முடியாது. அனுமதிக்கக் கூடாது.
இதுவரை சிதைக்கப்பட்ட பாடல்கள்:
'தொட்டால் பூ மலரும்'
'தங்கப் பதக்கத்தின் மேலே'
'என்னாடி முனியம்மா'
'என்னாசை மைதிலியே'
'என்னம்மா கண்ணு சௌக்கியமா'
இன்னும் பல.
இப்போது தொடர்ந்து ஒரு படத்துக்கு ஒரு பழைய பாடல் கொலை என நடந்து வருகிறத்.
முன்பு இருந்த இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் ஒரு சில நூறுகள், சில ஆயிரங்களுக்காக தங்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டு உருவாக்கிய காலத்தால் அழியாத பாடல்களை, இந்த திருடர்கள் திருடி விற்று லட்சங்களைக் கொள்ளையடிக்க திரையுலக முன்னோடிகளும், திரைப்பட ரசிகர்களும் அனுமதிக்கக் கூடாது.
வழக்குப்போட்டு, நீதி மன்ற வராண்டாக்களில் அலைய விட வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்.
Quote
Lt_Apple
View Public Profile
Find More Posts by Lt_Apple
All times are GMT +1. The time now is
03:02 AM
.