Reply to Thread New Thread |
![]() |
#23 |
|
|
![]() |
![]() |
#25 |
|
Venki,
I fully agree with you that for everytime when there is some problem asking an artist to return back his / her awards is ridiculous. This has been happening too often. At the same time, there is some merit in what geno says about the people left out in that poem by VM. Especially when he left out some people who were / are in power and who could have made a difference. What use calling the US and UN when you can't get your own ruler to do something about the tragedy? That aspect of being close to some people compromises his poetry as is evident in that poem. I have to accept it though I personally consider him the best film lyricist around. Wish he was more independent but then not all our wishes are granted, are they? |
![]() |
![]() |
#26 |
|
|
![]() |
![]() |
#27 |
|
Venki, thanks for dedicating a thread for Vairamuthu
![]() ![]() And I like the title "Vadugapatti Vairamuthu" ![]() Hamid, Glad that you love Thanneer Dhaesam, one of my all time favourites. It's just difficult to quote one or two lines from it - the whole book is a great read in terms of poetic marvel and content. It's an experience ! Keep writing about it, it will be useful for those who have not experienced it. Naanum appappO contribute paNRaen ![]() Vinatha, ஒத்தையடிப் பாதையிலே poetry is again a great one that showcases VM's mastery skills in "graamiya kavithaigaL" (he is a master with village/folk song lyrics too). I remember some lovely discussions on this particular poetry, steered mainly by geno in ulagam enbathu ethanai paer thread few years back. Will find and quote it here soon ![]() |
![]() |
![]() |
#28 |
|
Great, Please do.
![]() கவிஞரின் கிராமியப்பாடல்கள் - From early 80s முதல் மரியாதை to current தென்மேற்குப் பருவக்காற்று (2011 ) FANTASTIC. ![]() remember all those compositions in தமிழ் films ஆச கேப்ப களிக்காச ஆச கெளுத்தி மீனுக்காச அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக..... ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு....பாலா & ஜானு. அச்சமில்லை அச்சமில்லை பாடல்கள் காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே..... title song of மலையூர் மம்பட்டியான் கண்ணான பூ மகனே...... கருத்தம்மா பாடல்கள். ![]() vinatha. |
![]() |
![]() |
#29 |
|
Hi Vinatha, I though I'd first post the poetry and then geno's post. So here we go...
விறகு அவன் ஒத்தையடிப் பாதையிலே ஊர்வலமாப் போறவளே வெட்டரிவா வச்சவளே விந்திவிந்திப் போறதெங்கே? கொண்டையில் பூமணக்கக் கொசுவத்தில் நான்மணக்கத் தண்டையில ஊர்மணக்கத் தங்கமயில் போறதெங்கே? தூக்குச் சட்டியில்ல தொணைக்குவர யாருமில்ல காலுக்குச் செருப்புமில்ல காட்டுவழி போறதெங்கே? அவள் தூண்டிமுள்ளுக் கண்னழகா தூரத்தில் பேரழகா போறவளக் கேலிசெய்யும் புளியவிதைப் பல்லழகா முருக மலைமேல முள்விறகு நானெடுக்க பொழப்பு நடக்கணுமே புறப்பட்டேன் கால்கடுக்க ஒம்பொழப்பு தரையோட எம்பொழப்பு மலையோட நெத்திவெயில் பொழுதாச்சு நேரமில்லை விளையாட எட்டுமேல எட்டுவச்சு எட்டுமைல் நான்நடந்தா உச்சிப் பொழுதுவரும் உள்நாக்கில் தாகம்வரும் செத்தஎலி மிதந்தாலும் செல்லாத்தா சுனைத்தண்ணி உள்நாக்க நனைக்கையிலே உசுருக்கு உசுருவரும் கோடைவெயில் சுட்டதிலே கொப்புளந்தான் மெத்தவரும் கொப்புளத்தக் கற்பழிச்சுக் குச்சிமுள்ளு குத்தவரும் இண்டம் புதர் இழுக்கும் எலந்தமரம் கைகிழிக்கும் பொத்தக் கள்ளிமுள்ளு பொடவையில நூலெடுக்கும் பொசுக்கென்று மழைவருமோ? போகையிலே புயல் வருமோ? காஞ்சமரம் வெட்டையிலே ரேஞ்சர் வருவானோ? எங்கிருந்தோ பயம்வந்து எச்சில் உலந்திவிடும் மாத விலக்கானாலும் பாதியில் நின்னுவிடும் வேறகு வெட்டும் அரிவாளோ வேறகவிட்டு வெரலுவெட்டும் கத்தாழை நார்தானே கடைசியிலே கயிறுகட்டும் கட்டிவச்ச வேறகெடுத்து நட்டுவச்சு நான்தூக்க நலுங்காமத் தூக்கிவிட நானெங்கே ஆள்பார்க்க? இடுப்புப் புடிக்க எங்கழுத்துக் கடுகடுக்க மந்தைவந்து நான்சேர மாலை மசங்கிவிடும் மந்தையில வெறகவச்சா மங்கையைத்தான் பாப்பாக பச்சை விறகாச்சேன்னு பாதிவெலை கேப்பாக கேட்ட வெலைக்குவித்துக் கேழ்வரகு வாங்கிக்கிட்டு முந்தாநாள் கத்தரிக்கா முந்தியில ஏந்திக்கிட்டுக் குடிசைக்கு நான்போனாக் குடிதண்ணீர் இருக்காது என்வீட்டு அடுப்பெரிக்க எனக்கு விறகிருக்காது |
![]() |
![]() |
#31 |
|
This is the post of geno. This has been written as a response to a hubber who was not very much fluent in thamizh. You can check this link for the detail discussion ; http://www.mayyam.com/hub/viewtopic....=asc&start=165
Bad boy! |
![]() |
![]() |
#32 |
|
|
![]() |
![]() |
#33 |
|
Good.
Great man has put his children through college, he may need money to buy pattam, panju mittai Ruskin bond's The room on the roof - book to WII SPORTS video games for his grandsons & jewels to his great grandaughters... or may be second/ third honeymoon trip around the world with his loving wife. ![]() ![]() ![]() vinatha. |
![]() |
![]() |
#35 |
|
kallikattu idhikasam....is a great novel by kavingar.
all about village life. very emotional novel. moving feelings about love, sufferings etc.. rich in intricate varnanaigal & very elaborate. thanks ..... I pull my copy from my bookshelf and drench myself in the impact of emotional pathos. vinatha. |
![]() |
![]() |
#36 |
|
kallikattu idhikasam....is a great novel by kavingar. கிராமிய வாழ்க்கையை ஓரளவேனும் அனுபவித்தவர்களுக்கு இந்தக் கதையின் யதார்த்தம் நன்றாகவே புரியும். பாராட்டப்பட வேண்டிய மற்றோரு அம்சம் கதைக்கு உயிர் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கும் ஆய்வுகள். கஞ்சிக்கு துவையல் அரைப்பது, கோழியை அடித்து குழம்பு வைப்பது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, முடி வெட்டுவது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது, கிணறு தோண்டுவது , சாராயம் காய்ச்சுவது, அணைக்கட்டு கட்டுவது என்று ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான செய்முறை விளக்கம் கூறியிருப்பதை படித்தபோது தெரிந்தது இந்தக் கதைக்கான கவிஞரின் உழைப்பு. |
![]() |
![]() |
#37 |
|
oh.... his style of poetic touches, vivarangal with stunning visual imagery of the land- rural area.
He totally earned the award. Justice done. எப்பவுமே வார்த்தைகளால் ஓவியம் வரைந்து கண் முன்னால் நிறுத்துவார் , கவிஞர். ![]() கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம் கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம் ![]() cinema paadalukkey ippadi ezhudhiyavar. vinatha. |
![]() |
![]() |
#38 |
|
இன்னொரு முறை மீள்வாசிப்பு தண்ணீர் தேசத்தை. ஹமித்திற்கு நன்றி. நல்லதொரு வாசிப்பு அனுபவம். பல இடங்களில் நாம் பார்த்திருந்த காட்சிகளை இவர் எழுத்து வடிவில் பார்க்கும் போது பரவசம். உதாரணமாக கடல் பயணத்தின் ஆரம்ப இடங்களில் இப்படி..
ததும்பும் தண்ணீர் ஊஞ்சல்மேலே அழகுப் பறவைகள் ஆடுவது பார். இந்த வரிகளை கடக்கும் போது, அந்தக் காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. நாமும் ஒரு பார்வையாளனாக விசைப்படகில் அவர்களோடு பயணிக்கத் தொடங்குகிறோம். தமிழ்(கதையில் வரும் பெண்ணின் பெயர்) கடல் ஒவ்வாமையால் மயக்கம்,வாந்தி வரும் நிலை.. எனக்கிது தேவைதானா? அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் வாயில் விழுந்ததில் வார்த்தை நனைந்தது. ஒரு இடத்தில் கடல் அலை விசைப்படகில் புகுந்து தமிழை நனைத்துவிடுகிறது. தண்ணீர் சொட்டச் சொட்ட தானே தலைதாங்கித் தமிழ்ரோஜா அழுதாள். அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது? கடல்மீன் அழுத கதைதான். இன்னொரு இடத்தில் தமிழ் வாடியிருக்கும் முகத்திற்கு இப்படி ஒரு உவமை. வாடிய கீரையைத் தண்ணீர் தெளித்து வைப்பது மாதிரி வாடிய அவள் முகத்தில் வேர்வை தெளித்தது வெயில். தண்ணீர் தேசம் நாவல் முழுவதும் ஏதோ ஒரு முக்கியமான க்ரிக்கட் இறுதிபோட்டியின் Highlights-ஐ தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பது போல இருக்கிறது. வரிக்கு வரி கவிஞர் நான்கு, ஆறு என ரன்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார். |
![]() |
![]() |
#39 |
|
My earliest memory of his poems should be this one.
கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் அரபியில் சொன்னாள் அம்மா எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ் நதிகளிரண்டும் வீசியடித்த அலைகளிலேதான் முதல் நாகரிகம் முளை கட்டிற்றாம் உங்கள் நாட்டில் நதிகளே இல்லையா புஷ் அங்கிள்? உங்கள் ஆயுதம் கூர் சோதிக்க என் பிஞ்சு மண்டை ஓடுதான் கிடைத்ததா? ரொட்டி சலித்த உங்கள் குட்டி நாய்க்கு எங்கள் குருத்தெலும்பென்றால் கொள்ளை ஆசையா? கனவுகள் நனைந்து பூமிக்கு வந்தேன் ரோஜாக்கள் வெடிக்கும் நுண்ணொலி கேட்கவே இராக்கில் பிறந்தேன் பகலில் சூரியன் இரவில் நிலவு இரண்டையும் வெடித்தால் எங்ஙனம் தாங்குவேன்? மு... மு... முட்டுதே மூச்சு சுவாசப் பையில் என்ன நெரிசல்! காற்றில் கலந்த சதைத்தூள் நிறைந்து நெரிபடுதோ என் நுரையீரல்? அலெக்சாண்டர் வாளில் மங்கோலிய வில்லில் பிரிட்டிஷ் பீரங்கியில் கருகாத எங்கள் பேரீச்சங் காடுகள் தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே! இன்னோரு பருவம் பேரீச்சை பழுக்குமோ? பேரீச்சை தின்ன நாங்கள் இருப்பமோ? நெருப்பு மழை அக்கினி அலை சூரியன் உடைந்து பூமியில் ஒழுகினால் எப்படித் தாங்கும் என் மெல்லிய செந்தோல்? மொத்தப் பிணக்குழியில் என்னையும் இழுத்து எறியும்பொழுது என் பிரிய பொம்மையைப் பிரிக்க மாட்டீரே? எங்கு நோக்கினும் ரத்தப் படுகை பாலைவனத்தை நாளை தோண்டினால் தண்ணீரின் நிறம் சிவப்பாயிருக்குமோ? ஏனிந்த விஷவெறி? ஏசுவா? அல்லாவா? அதுவல்ல கேள்வி டாலரா? தினார? அதுதானே கேள்வி! இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன் அனுப்பட்டுமா புஷ் அங்கிள் உங்கள் வேட்டு விலாசமிட்டு? ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை : எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில் நீங்கள் மூட்டிய பூதப் புகையில் வாழ்வு தேசம் சுவாசம் எல்லாம் கறுத்துக் கறுத்துக் கறுத்தழிந்தது உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும் இன்னும் என்ன 'வெள்ளை மாளிகை?' வீடோ பெயரோ மாற்றுவீர்களா? நான் இறந்துபோயினும் வந்து சேரும் ஏழு தினார்! |
![]() |
![]() |
#40 |
|
கிராமிய வாழ்க்கையை ஓரளவேனும் அனுபவித்தவர்களுக்கு இந்தக் கதையின் யதார்த்தம் நன்றாகவே புரியும். பாராட்டப்பட வேண்டிய மற்றோரு அம்சம் கதைக்கு உயிர் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கும் ஆய்வுகள். கஞ்சிக்கு துவையல் அரைப்பது, கோழியை அடித்து குழம்பு வைப்பது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, முடி வெட்டுவது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது, கிணறு தோண்டுவது , சாராயம் காய்ச்சுவது, அணைக்கட்டு கட்டுவது என்று ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான செய்முறை விளக்கம் கூறியிருப்பதை படித்தபோது தெரிந்தது இந்தக் கதைக்கான கவிஞரின் உழைப்பு. வலைப்பதிவில் உலாவியபோது கவிஞரின் உழைப்பைக் குறித்த ஒருவரது பின்னூட்டம்.. வைரமுத்து எனும் கவிஞனின் பேய் உழைப்பை நண்பர்கள் பலரது வாயிலாக கேட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் நாஞ்சில் நாடனுடான சந்திப்பொன்றில் 'வைரமுத்துவைக் காட்டிலும் கடுமையா உழைக்கிறேன்பா' என்று ஓப்புமைக்கு வைரமுத்துவை எடுத்துக்கொண்டார். |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|