LOGO
Reply to Thread New Thread
Old 01-30-2006, 07:00 AM   #1
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
PR, " தொலைந்து போனவர்கள்" came as a weekly serial produced by Chola creations (ppl who made Thalai vaasal), directed by Selva. It was telecasted during the early 90's (or late 80's, not sure) in DD. It was a well made serial. Actor Rajesh played Damu character and "Thalaivasal" Vijai played as one of the friends. It was so engrossing that I used to be there punctually in front of my TV set every week.

I have not read the book though.
Ifroham4 is offline


Old 03-08-2006, 07:00 AM   #2
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.

திரியின் தலைப்பு :
தற்க்கால தமிழ் இலக்கியம்

கேள்வி:
தற்க்கால தமிழ் இலக்கிய போக்கு எப்படி உள்ளது ?

பதில்கள்:
வள்ர்ச்சியடைந்துள்ளது
ஒன்றும் புரியவில்லை
வீழ்ச்சியடைந்துள்ளது
Big A is offline


Old 03-11-2006, 07:00 AM   #3
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
திலீப் குமார் - குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர்.

அவருடைய அக்ரகாரத்தில் பூனை சிறுகதை
tgs is offline


Old 06-25-2006, 07:00 AM   #4
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
>>கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?
Fegasderty is offline


Old 01-25-2008, 12:05 AM   #5
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default thaRkkaala thamizh ilakkiyam
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
PhillipHer is offline


Old 01-25-2008, 01:54 PM   #6
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
Interesting logic there. I wish you took into account people's current-day tamil spellings and missing otru's, also as factors for state of tamil today.

To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support.
Fegasderty is offline


Old 01-25-2008, 02:32 PM   #7
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
தரமான தனி நாவல்கள், கதைகள், கட்டுரைகள்,காரசாரமான விவாதங்கள், சுவையான அலசல்கள், பட்டிமன்றங்கள் இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் இணையதளங்களும் அருமையாக, ஆரோக்கியமாக பெருகியுள்ளன. மொழியின் புது பரிமானங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் வெகுஜன சஞ்சிகைகளின் சில கவர்ச்சியான வார்த்தை பிரயோகங்கள் அழகாயில்லை- என் கருத்தில், நாகரிகத்தின் எல்லைகள் மீறப்படுவதால். திரைப்பட பாடல்கள் இலக்கியமா என்று சந்தெகம் இன்றைய காலகட்டத்தில் எழும்புகிறது-வியக்கத்தக்க கற்பனைகளும், அருவருப்பான,அபத்தமான குப்பைகளும் கலந்து கிடக்கின்றன அவற்றிலே-இவ்வளவு ஆங்கில கலப்பும் அவசியமா என்றும் தோன்றுகிறது.சிறுபிள்ளைதனமாக, கோணங்கிதனமாக எழுத்தப்படுவதெல்லாம், மேடையில் முழங்கப்படுவதெல்லாம் கூட இலக்கியமாக சித்தரிக்கப்படும் அவலமும் காணப்படுகிறது. உமியை பிரித்து ஊதிவிட்டு அவலை மெல்ல வேண்டியுள்ளது.
Beerinkol is offline


Old 01-25-2008, 06:08 PM   #8
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
Originally Posted by RS தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
Interesting logic there. I wish you took into account people's current-day tamil spellings and missing otru's, also as factors for state of tamil today.

To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support. Thanks for the support Ok Agreed about readability part but this being a Tamil Literary section, I hope People having a comprehensive knowledge about Tamil writint/reading will only frequent here. So what will be the problem if topics here are in Tamil Fonts ???

Otru pizhai and spelling are truly a matter of concern.
But people like me who didnt have formal Schooling In Tamil (Studied Hindi & English in KV) should be excused, if any mistakes are found
9mm_fan is offline


Old 01-27-2008, 01:09 AM   #9
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
ஆங்கிலக்கலப்புக்கு இவ்வளவு கவலைப்படுகிறீர்களே, அதற்கும் வடமொழிக்கலப்புக்கும் அப்படியென்ன வேற்றுமை?

எடுத்துக்காட்டாக, இலக்கியம் என்பதே வடமொழிச்சொல் தான் என்பதாக ரா.பி.சேதுப்பிள்ளை எழுதி இருக்கிறார் (லக்ஷ்மி = இலக்குமி, லக்ஷ்யம் = இலக்கியம், லக்ஷணம் = இலக்கணம். குறிக்கோள் / நோக்கம் என்பதே இலக்கியத்தின் தமிழ்ச்சொல்; எத்தனை நூல்கள் இன்று உயர்ந்த குறிக்கோளுடன் உள்ளன?)
Paul Bunyan is offline


Old 01-27-2008, 01:59 AM   #10
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
வடமொழி கலப்பு சதவீதத்தைவிட ஆங்கில கலப்பு அதிக சதவீதம் ஆவது போல் தோன்றுவதே கவலைக்கான காரணம்! தமிழ் எழுத படிக்க தெரியாதோர் தொகை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தமிழ் என்று அறியப்படும் மொழியில் பாதி அளவாவது தமிழாய் இருக்க வேண்டுமே என்பது என் ஆதங்கம். போலி நாகரிக உணர்வால் ஆங்கில கலப்படம் செய்வதை கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை!
Slonopotam845 is offline


Old 01-27-2008, 11:25 AM   #11
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
.
தமிழ் இலக்கியம்.. என்பது என்றைக்கும் இலக்கியம் தான். இதில் பழையது என்ன?... புதியது என்ன.?

சந்திரனில் பழைய சந்திரன், புதிய சந்திரன்.. என்று ஏதாவது சிந்தனை உள்ளதா.? என்றைக்கும் புதுமை தானே.?

முருகன் என்றும் புதியவன் என்று ஔவை கூறினாளே... அது போல.

அதே போல... ஐம்பெரும் காப்பியங்கள், கம்ப-ராமாயணம், வில்லி பாரதம், நள-வெண்பா போன்ற தரமான உயர் தமிழ் இலக்கியங்கள் யாவுமே...

...என்றைக்கும் அன்றலர்ந்த தாமரை போன்றவையே

இவ்வாறு நான் சொல்வதால்... தற்கால இலக்கியத்தை பழிப்பதாக பொருள் செய்யலாகாது.

தற்கால இலக்கியம் பற்றி சொல்ல வேண்டியவை ஏதேனும் இருந்தால்... தாராளமாக கூறலாமே.

அதை விடுத்து... பழையது புதியது என்று பாகம் பிரித்து எல்லைக்கோடு போடுவது ஏனோ.?
.
TorryJens is offline


Old 01-28-2008, 01:33 AM   #12
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
என் கருத்து அதற்கு மாறானது. மாற்று மொழிகள் கலக்க அனுமதிக்கும்போது தான் ஒரு மொழி உயிர் வாழும் (ஆங்கிலம் போல், தமிழ் போல்)...காலத்துக்கேற்ப உரு மாறாவிட்டால் தான் மொழி சாகும் மொழி மக்களுக்காகத்தான் - மொழிக்காக மக்கள் இல்லை! மக்களுக்கு அன்றாடம் பயனில்லா மொழி எளிதில் இறந்து போகும்!
brraverishhh is offline


Old 01-28-2008, 02:10 AM   #13
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
மாற்றம், உருமாற்றம் அவசியமானதே! தேவையில்லாமல் கனியிருப்ப காய் கவர்தலும் தமிழ் கொலையும் கணிடிக்கதக்கது! மாற்றுச்சொல் இல்லாத போது எளிமையான புரிதலுக்காக என்கிற சந்தர்ப்பங்களை தாண்டி கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?
S.T.D. is offline


Old 01-28-2008, 05:31 AM   #14
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
பல காரணங்கள். காலத்தின் முத்திரை ஒரு வித தர முத்திரையாக ஏற்பதால் படிக்கும் சொற்பத்தை பழந்தமிழ் இலக்கியத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

இன்னோரு காரணம் ஒரு வித அபாயச்சுழல்: பரிச்சயமின்மை. அநேகம் பேருக்கு - என்னையும் சேர்த்தே சொல்கிறேன் - பாரதியோடு வாசிப்பு நின்றிருக்கலாம். அதையும் தாண்டி ஒன்றிரண்டு வாசித்திருந்தாலும் விவாதிக்கும் அளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அதனாலேயே இது அதிகம் பேசப்பட, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

நீங்களே துவங்குங்களேன். சமீபத்தில் வெளிவந்ததில், நீங்கள் விரும்பிப் படித்த நாவல் பற்றி எழுதுங்களேன்.
softy54534 is offline


Old 01-29-2008, 04:49 AM   #15
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
தங்கள் நல்வாக்கு பலிக்கக் கடவ!
PhillipHer is offline


Old 01-29-2008, 05:52 AM   #16
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
..Thisai maarhum Parhavaiyaa.?

[quote]>>கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?
radikal is offline


Old 01-29-2008, 06:24 AM   #17
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
தட மாற்றத்துக்கு மன்னிக்கவும்

தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?
Fegasderty is offline


Old 01-29-2008, 07:15 AM   #18
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
.
தட மாற்றத்துக்கு மன்னிக்கவும்

தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?
.
என் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

இந்த இழையின் தலைப்பு என்ன? நீங்கள் விவாதிப்பது என்ன.? ஏதாவது தொடர்பு உள்ளதா.?

துவக்க தேர்தல்- பட்டியும் தமிழின் தற்கால இலக்கிய- தரம் பற்றியே கேள்வி கேட்கிறது.!

இது நமக்கு தேவையற்ற குழப்பம் அல்லவோ.?

நீங்கள் எல்லோரும் எதை பற்றி வேண்டுமானாலும் உரையாடுங்கள். உங்கள் விருப்பம் போல... வரவேற்கிறேன்.

அதாவது... தலைப்பிற்கு ஏற்றபடி... தற்கால தமிழ் இலக்கியம் பற்றி...

..நீங்கள் எவருமோ அல்லது மற்றவர்களோ ஏதாவது கூற வேண்டியிருந்தால் கூறுங்கள்... இங்கே.

மாறாக தற்போது மாறியுள்ள திசையானால்...

...இதோ ஏற்கனவே அந்த இழை இருக்கிறது...

அங்கே உங்கள் கருத்துக்களை அந்த இழை சம்பந்தப்பட்ட வகையிலே... கூறுங்கள்.

ஆனால் "கிளி" என்று தலைப்பிட்டு "மயிலை" காட்டாதீர்.

. கிளியா.? மயிலா.?
.
9mm_fan is offline


Old 02-27-2008, 06:42 PM   #19
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
இத்திரியில் நாம் சமீபத்தில் சாசித்த நூல்களைப் பற்றி உரையாடலாம். (Like the "What's your latest read" thread in the English Lit. forum)
Lillie_Steins is offline


Old 02-27-2008, 07:15 PM   #20
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
சுஜாதாவில் 'கடவுள்' கட்டுரைத் தொகுப்பு.

'கடவுள்' என்ற கான்செப்டை (இதற்கு தமிழ்சொல் என்ன ?) வரலாறு,மதம், இலக்கியம், இயற்பியல் என்ற பல கோணங்களில் இருந்து அலசி எழுதப்பட்ட கட்டுரைகள்.

80-90 களில் (சுஜாதாவின் பொற்காலம் ?) பல பத்திரிக்கைகளில் எழுதியவற்றின் தொகுப்பு. புரிவதற்கு கடினமானவற்றைக் கூட அணுகமுடியுமாறு எழுதப்பட்ட கட்டுர்ரைகள். வெவ்வேறு தொடர்களின் தொகுப்பு என்பது நன்றாகத் தெரிவது ஒரு குறை (திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட தகவல்கள், பாசுரங்கள்).

அப்பித்திரிக்கையின் சராசரி வாசகன் யார் என்பதை வைத்துக்கொண்டு எழுதுப்பட்டிருக்கிறது. சிலவற்றில் வெறும் தகவற்குவியல், சிலவற்றில் வியப்பான கேள்விகள், சற்று ஆழமான ஆராய்ச்சி, வாசகன் மீது எப்போதும் ஒரு கண்:

இதற்கு மேல் எழுதினால் மூடிவைத்துவிட்டு பெப்ஸி உங்கள் சாய்ஸ் பார்க்க சென்றுவிடுவீர்கள்

அதிகம் தலைமுடி உள்ளவர்கள் இக்கேள்வி பற்றி மேலும் யோசிக்கலாம்

கடினமானவற்றை விளக்கும்போதுகூட குன்றாத மொழிச்சரளத்துக்காகவே இதைப் படிக்கலாம்.
Peptobismol is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 07:00 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity